நேற்றைய போட்டியில் தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்..!
rishabh pant breaks dhoni record
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரின் முதல் போட்டி கடந்த 3 ஆம் தேதியும், இரண்டாவது போட்டி 4 ஆம் தேதியும் அமெரிக்கவில் நடைபெற்றது.
T20 தொடரின் இறுதிப்போட்டியானது மேற்கு இந்திய தீவுகளில் ஒரு நாடான கயானாவில் நேற்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் 65 ரன்கள் அடித்ததன் மூலம் சர்வதேச T20 தொடரில் அதிக ரன் எடுத்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். நேற்று நடந்த போட்டியில் 3-வது விக்கெட்டுக்கு கேப்டன் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 42 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். அதில் 4 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் அடித்து உள்ளார்.
இதற்கு முன்பு 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியி தோனி அடுத்த 56 ரன்களே அதிகபட்ச ரன்கள் ஆகும். இந்திய அணியின் தோனி இடத்தை ரிஷப் பண்ட் நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்ளும் அளவிற்கு நேற்றைய போட்டியில் அவரது ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தினார்.
English Summary
rishabh pant breaks dhoni record