இந்தியா இலங்கை தொடர் புதிய அட்டவணை அறிவிப்பு! உறுதி செய்த ஜெய் ஷா!  - Seithipunal
Seithipunal


இந்தியா இந்தியா இலங்கை அணிகள் இடையேயான 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி தொடர் ஆனது இலங்கையில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டித் தொடருக்கான இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

கொரோனா காலம் என்பதால் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இங்கிலாந்திலிருந்து திரும்பிய இலங்கை அணியில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, முன்னதாக நடைபெற இருந்த போட்டிகள் ஆனது ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஒரு நாள் போட்டிகள் ஜூலை 13, 16, 18 ஆகிய 3 தேதிகளில் நடைபெறுவதாக இருந்த நிலையில் தற்போது அதனை மாற்றி ஜூலை 18, 20, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும், 20 ஓவர் போட்டிகள் முன்னதாக ஜூலை 21, 23, 25 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த நிலையில், தற்போது அதனை மாற்றி 25, 27, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரான ஜெய் ஷா உறுதி செய்து அறிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

reschedule of India tour of Srilanka


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->