#BigBreaking :  மாஸ் மல்யுத்தம்., அரையிறுதிக்கு இந்திய வீரர்.!  - Seithipunal
Seithipunal


ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது. பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

அவரைத் தொடர்ந்து மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிட்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி வி சிந்து வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதேபோல் இந்திய ஹாக்கி ஆடவர் மற்றும்  மகளிர் அணி ஒரே நேரத்தில் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்தது.

இதில், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி அரையிறுதி போட்டியில் இன்று தோல்வியடைந்து. இருப்பினும் வெண்கல பதக்கத்தை வெல்வதற்கான போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி மோத உள்ளது.

இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் ஆடவர் போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா அரை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ எடைப் பிரிவு போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா, பல்கெரிய வீரரை 14-4 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RAVIKUMAR IN SEMI FINAL


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->