பஞ்சாபை வீழ்த்துமா ராஜஸ்தான், வழிமேல் விழி வைத்து காத்திருக்கும் கொல்கத்தா, ஹைதராபாத்!
Rajasthan Royals choose Bowl first in must win game against KXIP
2020 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான 50 வது லீக் போட்டியில் இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
புள்ளிபட்டியல் 12 புள்ளிகளுடன் 4 ஆவது இடத்தில் இருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், 10 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. 12 புள்ளிகளுடன் இருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அடுத்து வரும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துவிடும்.
அதேசமயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்து வரும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று மற்ற அணிகள் வெற்றி தோல்வியை வைத்து தான், அடுத்த சுற்றுக்கான வாய்ப்பே இருக்கும். அதேபோல கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை சுமுகமாக்க வேண்டுமென்றால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஆக வேண்டும்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை ராஜஸ்தான் வீழ்த்தி விட வேண்டும் என கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இரண்டு அணிகளும் களமிறங்குகின்றன. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை. காயமடைந்துள்ள தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் மீண்டும் அணியில் இடம்பிடிக்கவில்லை. அவருக்கு பதிலாக கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய மந்தீப் தொடர்கிறார். கட்டாய வெற்றியை நோக்கி விளையாடுவதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
English Summary
Rajasthan Royals choose Bowl first in must win game against KXIP