கணிதத்திறன் மேம்பட.. ராஜா... ராணி... விளையாட்டு..!!
raja rani game
ஒரு கையில் நொறுக்குத் தீணியும், மறுகையில் போனும் வைத்து விளையாடுவதினால் உடல் சோர்வு, உடல் எடை அதிகரித்து ஆரோக்கியம்தான் குறையும்.
குழந்தைப் பருவம் என்பது ஓடி ஆடி விளையாட வேண்டிய பருவம். படிப்பு, நல்ல வேலை, வசதியான வாழ்க்கை என்பவை அவசியம்தான். ஆனால், விளையாட்டைத் தொலைத்துத்தான் வாழ்க்கையில் வெல்ல முடியும் என்றில்லை.
விளையாட்டு என்றவுடன் நமக்கு மைதானம்தான் நினைவிற்கு வரும். ஆனால், வீட்டுக்குள்ளேயும், வீட்டுத் திண்ணையிலும், குடும்பத்தில் உள்ளவர்களுடனும் அல்லது நம் நண்பர்களுடனும் சேர்ந்து விளையாடும் விளையாட்டுகளும் உள்ளது.
அதில் வீட்டுத் திண்ணையில் நம் உறவுகளுடன் சேர்ந்து விளையாடிய விளையாட்டுகளில் ஒன்றுதான் ராஜா ராணி.
எத்தனை பேர் விளையாடலாம்?
ஐந்து பேர்.
தேவையான உபகரணங்கள் :
வெள்ளைக் காகிதம் (பேப்பர்)
பேனா
எப்படி விளையாடுவது?
ராஜா, ராணி, மந்திரி, திருடன், போலீஸ் என வெள்ளைத்தாள்களில் எழுதிக் கொள்ளவும். பின்னர் ஒவ்வொருவருக்கும் மதிப்பெண்கள் தனித்தனியாக கொடுக்கப்படும்.
பலன்கள் :
கணிதத்திறன் மேம்படும்.
கண்டறியும் புலமை மேம்படும்.