சென்னை அணியை வீழ்த்த எங்கள் திட்டம் இதுதான்.! டெல்லி அணி வீரர் கூறிய தகவல்.!! - Seithipunal
Seithipunal


12வது ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. மே 12ம் தேதி இந்த தொடரின் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இந்த இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே சென்னை அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி தகுதிபெற்றுள்ளது.

நேற்று முன் தினம் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் டெல்லி அணி, ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதனால் இன்று நடைபெறவுள்ள குவாலிபையர் 2  போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகிறது

இந்த போட்டியில் வென்றால் தான் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால் இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு  தயாராகி வருகின்றனர். இன்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது.  

இந்நிலையில் இந்த போட்டி குறித்து டெல்லி கேபிடல்ஸ் அணியின் இளம் வீரர் ப்ரித்வி ஷா கூறியவை, இந்த போட்டியில் எங்கள் அணியில் உள்ள  அனைவரும் அவரவர் பங்கு என்ன என்பதை  நன்கு அறிவார்கள் என்று  நினைக்கிறேன். சென்னைக்கு எதிராக இந்த தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ளோம்.

சென்னையில்  ஹர்பஜன் சிங், தாஹிர் மற்றும் ஜடேஜா போன்ற  சிறந்த ஸ்பின்னர்கள் உள்ளனர். அவர்களை எல்லாம் எப்படி எதிர்கொள்வது, எப்படி வீழ்த்துவது என்பது குறித்து  நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

அவர்கள் பந்தில் நிதானமாக விளையாடுவது  யார் என்பதை குறித்தெல்லாம்  திட்டமிட்டு வைத்துள்ளோம். பேட்டிங் களத்திற்கு சென்றதும் அதை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம்.

போட்டி நடக்கும் மைதானம் எங்கள் இரண்டு பேருக்கும் சொந்த மைதானம் கிடையாது. அதனால் இந்த போட்டி இருவருக்குமே சற்று சவாலாக அமையும் என்று தெரிவித்தார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prithvi shaw says about csk


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->