ஓபனிங் இறங்கபோவது இவர்கள் தான்! ரகசியத்தை உடைத்த கேப்டன்! உற்சாகத்தில் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


ந்தியா நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க இருக்கின்றது. இதில், நம்பர் 1 இடத்தை தக்க வைக்க வேண்டிய சூழ்நிலையில் இந்திய அணியானது தள்ளப்பட்டுள்ளது. எனவே நாளை நடக்கவிருக்கும் இந்த போட்டியை காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

நாளை நடக்கவிருக்கும் போட்டியில் ஓபனிங் பேட்ஸ்மேனாக இறங்கப் போகும் வீரர் யார்? என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதனை தற்போது இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி சூசகமாக தெரிவித்துள்ளார். இதில், போட்டியின்போது காயம் அடைந்து ஓய்வில் இருந்த இஷாந்த் ஷர்மா, பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் மூவரும் களமிறங்கியிருக்கிறார் என்பதை இந்திய அணியின் கேப்டன் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், காயத்துக்கு முன் எவ்வாறு இஷாந்த் சர்மா பந்தை வீசினாரோ அதேபோல் தற்போது அவர் பந்தை வீசுகிறார். மேலும் சரியான இடத்தில் பிட்ச் செய்யும் அவர் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இரண்டு முறை விளையாடி இருக்கிறார். எனவே அவரது இந்த அனுபவம் எங்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு மயங்க் அகர்வால் ஆஸ்திரேலியாவில் மிகவும் நேர்த்தியாக ஆடினார். அதே போல், அவர் சிறப்பாக விளையாட வேண்டும் என்றும், பிரித்வி ஷாவுக்கு இன்டர்நேஷனல் விளையாட்டில் அனுபவம் இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் நான் அவ்வாறு கூற மாட்டேன் அவர் கடந்த ஆண்டு அதிக ரன்கள் குவித்துள்ளார். அதேபோல் நியூசிலாந்திலும் அவர் ஆட வேண்டும் என்பதை அவர் தெரிவித்துள்ளார். இதனால் மூவரும் போட்டியில் விளையாடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prithvi shaw get chance in opening test match


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->