எதிரணி எப்படி போட்டாலும் விளாசி தள்ளும் இந்திய வீரர் இவர் தான்.! புகழ்ந்து தள்ளிய பொலார்ட்.! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியை உலக தரத்திலான பேட்ஸ்மேன் (World class batsman) என்று வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொலார்ட் புகழ்ந்துள்ளார்.

மும்பை வா ண்டே மைதானத்தில் நேற்று நடைபெற்ற மூன்றாவது இருபது ஓவர் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி, இந்திய அணி வெற்றி பெற்றது, இதன் மூலமாக மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 2 - 1  என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

நேற்று போட்டிகள் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியை பொலார்ட், இந்திய அணி கேப்டன் கோலியை உலக தரத்திலான பேட்ஸ்மேன் என்றும், எதிரணியினரின் எப்படி பட்ட மோசமான பந்துவீச்சை விளாசி எப்படி ரன்களை குவிப்பது என்பதை க்ஹோலி நன்கு அறிந்தவர் என பாராட்டி பேசினார்.

மூன்றாவது கடைசி 20 ஓவர் போட்டியில் 240 ரன்களை இந்தியா குவித்ததை சுட்டிக்காட்டிய பொலார்ட், மிகப்பெரிய அந்த இலக்கை அடைவது சாத்தியமில்லாத ஒன்று என்றும் குறிப்பிட்டார். 

நேற்று நடந்த போட்டியில் 29 பந்துகளில் 70 ரன்களை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pollard wishes virat kholi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->