புள்ளிபட்டியலில் மாற்றம்! யாருக்கு பிளே ஆப் வாய்ப்பு?! மண்டையை கலங்க வைக்கும் கணக்கு!
Play off chances in IPL2020
2020 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான 50 வது லீக் போட்டியில் இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி பஞ்சாபை வீழ்த்தியது.
இந்த போட்டிக்கு முன்னர் புள்ளிபட்டியலில் 12 புள்ளிகளுடன் 4 ஆவது இடத்தில் இருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரன்ரேட் அடிப்படையில் அதே இடத்தில் நீடிக்கிறது. 10 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதன்மூலம் இனிவரும் போட்டிகள் பரபரப்பினை உண்டாக்கும். இன்னும் 3 இடங்களுக்கு 6 அணிகள் போட்டியிடுகின்றன. மும்பை முன்னேறிவிட்ட நிலையில், பெங்களூர் அணியும் ஏறக்குறைய முன்னேறிவிட்டது. டெல்லி அணிக்கும் பெரிய பிரச்சனையில்லை. கொல்கத்தா, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் தான் போராட்ட களத்தில் இருக்கிறது. இதில் கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகளுக்கிடையே போட்டிகள் இருப்பதால் ஒரு அணி 14 புள்ளிகளை பெற்றுவிடும். அதே வேளையில் பஞ்சாப் அணி சென்னையை வீழ்த்தினால் முன்னேறிவிடலாம்.
ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல ரன்ரேட்டில் இருக்கும் ஹைதராபாத் அடுத்த இரண்டு போட்டிகளையும் வென்றால் நேரடியாக உள்ளே சென்றுவிடும். ஆனால் அவர்கள் மோத இருப்பது மும்பையும் பெங்களூரும் என்பது கவனிக்கத்தக்கது.
English Summary
Play off chances in IPL2020