பாகிஸ்தான் வீரர்களுக்கு புதிய தடை விதித்த கிரிக்கெட் வாரியம்.! அதிர்ச்சியில் வீரர்கள்.!! - Seithipunal
Seithipunal


12-வது உலகக் கோப்பைப் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30-ஆம் தேதி தொடங்கி ஜூலை 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் 10 அணிகள் பங்கேற்கிறது. 

உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. மேலும் மே 31-ஆம் தேதி பாகிஸ்தான் vs மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மோதுகிறது. 

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அந்நாட்டு வீரர்களுக்கு ஒரு தடையை  விதித்துள்ளது. அதில் பாகிஸ்தான் வீரர்கள் தங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினர் தங்களுடன், உலக கோப்பை தொடருக்கு அழைத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

போட்டியின் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி இங்கிலாந்திற்கு வரும் வீரர்களின் குடும்ப செலவை அவர்கள் தன் தனிப்பட்ட முறையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அதற்கு கிரிக்கெட் வாரியம் செலவழிக்காது என்றும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pakistan players ban for world cup


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->