இந்திய அணியை இந்தமுறை வீழ்த்திவிடுவோம்.! பாக்., வீரர் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பை டி20 தொடர் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற உள்ளது.

இந்த டி20 போட்டியில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இதில், இந்திய அணி குரூப்-2 ல் இடம் பெற்றுள்ளது. இந்த குரூப் இரண்டில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.

குரூப் 2 பிரிவில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அக்டோபர் 24 அன்று மோதவுள்ளன. இந்த ஆட்டத்தை காண இரு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

2017 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்திய அணியை, பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. அதே சமயத்தில் டி20 உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரை பாகிஸ்தான் அணியை தொடர்ந்து இந்திய அணி வீழ்த்தி கொண்டே வருகிறது.

இந்நிலையில், இந்த முறை இந்திய அணியை வீழ்த்தி காட்டுவோம் என்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றோம். அதேபோல் டி20 உலகக் கோபையில் இந்திய அணியை மீண்டும் வீழ்த்த எங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்." என்று ஹசன் அலி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pak player say about ind vs pak match


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->