#BigBreaking : இந்தியாவுக்கு அடுத்த பதக்கம் உறுதியானது.! மல்யுத்த இந்திய ஆண் சிங்கம் அபார ஆட்டம்.! - Seithipunal
Seithipunal


ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

அவரைத் தொடர்ந்து மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிட்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி வி சிந்து வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதேபோல் இன்று நடைபெற்ற குத்துசண்டை போட்டியில் இந்தியாவுக்கு லவ்லீனா வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.

இந்நிலையில், சற்று முன்பு நடைபெற்ற மல்யுத்த அரையிறுதிப் போட்டியில், கஜகஸ்தான் நாட்டு வீரரை எதிர்கொண்ட இந்திய மல்யுத்த வீரர் ரவிக்குமார் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இதன் மூலம் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் உறுதியாகியுள்ளது. குறைந்தபட்சம் வெள்ளி பதக்கம் உறுதியாகியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக முதல் ஆண் சிங்கம் பதக்கம் வெல்ல இருப்பது இந்திய மக்களை பெரிதும் மகிழ்ச்சி அளித்துள்ளது.

மேலும், ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் ஆடவர் போட்டியில் இந்திய வீரர் தீபக் புனியா இன்னும் சற்று நேரத்தில் நடக்க உள்ள அரை இறுதி போட்டியில் ஆட உள்ளார். அவரும் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

olimpic ravikumar in final


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->