அடுத்த வாரத்தில் களமிறங்கும் தோனி.! மட்டற்ற மகிழ்ச்சியில் CSK ரசிகர்கள் !
next week dhoni start his practice for ipl
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், இந்தியாவில் இந்த வருடம் மார்ச் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற வேண்டிய ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. அதற்கு இந்திய விளையாட்டு துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டு இருந்தது. இன்று அதற்கான அனுமதி கிடைத்து. வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கப்படும் போட்டிகளானது நவம்பர் 10ம் தேதி முடிவடைகிறது. நவம்பர் 8 ஆம் தேதி இறுதி போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை தற்போது நவம்பர் 10ம் தேதி ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த போட்டி தொடரில் ஒரே நாளில் இரண்டு போட்டிகள் 10 நாட்கள் நடத்தப்படுகிறது. மேலும் இரவு நேர போட்டிகள் அனைத்தும் இரவு ஏழரை மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப கட்ட போட்டிகளுக்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. பின்னர் சூழ்நிலையை பொறுத்து ரசிகர்கள் அனுமதிக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாடும் அணிகள் அனைத்தும் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் தோனி, ரெய்னா, ஹர்பஜன் ஆகியோர் சென்னையில் அடுத்த வாரம் பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு தோனி தமிழகம் வரவுள்ளதாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்கி பயிற்சி மேற்கொள்ளவுள்ளதாலும்
ரசிகர்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.
English Summary
next week dhoni start his practice for ipl