அடுத்த மாதம் தமிழகத்தில் நடைபெற உள்ள கிரிக்கெட் தொடர்.! ரசிகர்கள் கொண்டாட்டம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடைபெறும் கிரிக்கெட்  தொடர் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் ஜூலை 19-ந்தேதி திண்டுக்கல் நடைபெற உள்ளது.

இந்த தொடரில்  நடப்பு சாம்பியன் மதுரை பாந்தர்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், கோவை கிங்ஸ், திருச்சி வாரியர்ஸ், காஞ்சி வீரன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் விளையாட உள்ளது.

டிஎன்பிஎல் கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் மோதல்

தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில்  ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெரும். இந்த ஆட்டம் தனமும்  இரவு 7.15 மணிக்கு தொடங்கும். இதில்  2 லீக் ஆட்டங்கள் நடைபெறும் நாட்களில் முதல் ஆட்டம் மட்டும்  பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெறும்.

இந்த தொடருக்கான  அட்டவணை நேற்று வெளியானது. முதலில் திண்டுக்கல்லில் உள்ள நத்தத்தில் வருகிற 19-ந் தேதி நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திண்டுக்கல் டிராகன்சை சந்திக்கிறது. நடப்பு சாம்பியன் மதுரை பாந்தர்ஸ் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 20-ந் தேதி முன்னாள் சாம்பியனான தூத்துக்குடி பேட்ரியாட்ச்சையிடம் விளையாட உள்ளது.

தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடர் திண்டுக்கல்லில் உள்ள  நத்தம், நெல்லையில் தலா 15 ஆட்டங்களும், சென்னையில் இறுதிப்போட்டி உள்பட 2 ஆட்டங்களும் நடைபெற உள்ளது. தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆகஸ்டு 18-ந் தேதி நடைபெறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

next month start tnpl cricket match


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->