சொதப்பிய இந்திய தொடக்க வீரர்கள்...! 296 ரன்கள் இலக்கு! வெற்றிபெறுமா இந்திய அணி..? - Seithipunal
Seithipunal


நியூசிலாந்துக்கு எதிராக இன்று நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் மயங் அகர்வால் மூன்று பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டத்தை இழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிரிதிவி ஷா 42 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அதன் பின், களமிறங்கிய அணியின் கேப்டன் விராட்கோலி 9 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்ததாக ஜோடி சேர்ந்து ஆடிய ஷ்ரேயஸ் அய்யர், KL ராகுல் இருவரின் நிதான ஆட்டத்தால் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். 63 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஷ்ரேயஸ் அய்யர் ஆட்டம் இழந்தாலும் மனிஷ் பாண்டேவுடன் ஜோடி சேர்ந்த KL ராகுல் மீண்டும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

112 பந்துகளில் 113 ரன்கள் என்ற நிலையில் KL ராகுலும், 48 பந்துகளில் 42 ரன்கள் என்ற நிலையில் மனிஷ் பாண்டேவும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழந்தனர். இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new zealand vs indian 3rd odi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->