இந்தியாவை கதறவிட்ட நியூசிலாந்து! பரிதாபமான பந்துவீச்சால் விழிபிதுங்கிய இந்திய வீரர்கள்!  - Seithipunal
Seithipunal


நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இன்று ஆக்லாந்தில் தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்திய அணியின் விக்கெட் கீப்பராக அழைத்துச் செல்லப்பட்ட  ரிஷப் பாண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவரும் வெளியில் அமர வைக்கப்பட்டு லோகேஷ் ராகுல் விக்கெட் கீப்பராக அணியில் சேர்க்கப்பட்ட நிலையில், இளம் வீரர்கள் சஞ்சு சம்சன், ரிஷப் பாண்ட், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் வெளியில் அமர வைக்கப்பட்டனர். 

ஆரம்பம் முதலே அடித்து ஆடிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர்கள்குப்திலும், முன்றொவும் இந்திய அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார்கள். எட்டாவது ஓவரில் தான் இந்திய அணிக்கு முதல் விக்கெட் கிடைத்தது. சிவம் துபே பந்தில் மார்ட்டின் குப்திலின் அசத்தலான ஒரு ஷாட்டினை சிக்ஸ் லைனில் நின்ற ரோகித் சர்மா துல்லியமாக கேட்ச் செய்ய இந்திய அணிக்கு முதல் விக்கெட் கிடைத்தது. 19 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சர்டன் 30 ரன்கள் எடுத்தார் குப்தில். அதற்குள் நியூசிலாந்து அணியானது 80 ரன்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதன்பின்னரும் நியூசிலாந்து அணியின் ரன் வேட்டையை தொடர்ந்து கொண்டே இருக்க, இந்திய அணி அடுத்தடுத்து பந்துவீச்சாளர்களை மாற்றி பார்த்தும் எவ்வித பலனும் அளிக்கவில்லை. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஷார்துல் தாக்குர் பந்து வீச்சினை நியூசிலாந்து வீரர்கள் சிக்சர்களாக பறக்கவிட்டு, அந்நாட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்கள். கோலின் மொன்றோ 42 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 59 ரன்கள் எடுத்து தாக்குர் பந்தில் சஹாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்து வந்த கிரந்தோமே இரண்டு பந்துகளில் ரவிந்திர ஜடேஜாவின் சூழலில் சிவம் தூபேவிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார். 

அதற்கடுத்து வந்த ரோஸ் டைலர் கேப்டன் வில்லியம்சன் உடன் இணைந்து இந்திய அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார்கள். 4 பவுண்டரி 4 சிக்ஸர்களுடன் 26 பந்துகளில் 51 ரன்கள் குவிக்க சாஹலின் பந்துவீச்சில் கோலி இடும் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் கேப்டன் வில்லியம்சன். அடுத்து வந்த சீபர்ட் பும்ரா பந்துவீச்சில் அய்யரிடம் கேட்ச் கொடுத்து ஒரு ரன்னில் ஆட்டம் இழக்க இறுதியில் மிட்செள் சண்ட்னர் 2  ரன்களுடன் களத்தில் நின்றார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற மூத்த வீரர் ரோஸ் டைலர் 3 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 27 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். 

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணியானது 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணி தரப்பில் தாக்குர், பும்ரா. சிவம் துபே, ஜடேஜா, சாஹல் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள். 4 ஓவர்களை முழுமையாக வீசிய முகமது சமி 53 ரன்களை விட்டுக் கொடுத்தும் ஒரு விக்கெட்டையும் எடுக்க முடியவில்லை. இந்திய அணிக்கு 204 ரன்கள் என்ற சவாலான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New Zealand set 204 target of India in Auckland 1st T20I


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->