தோனிக்கு என்ன தான் ஆனது?! காக்கப்படும் ரகசியம்! வெளியான புதிய மற்றும் அதிர்ச்சி தகவல்!
new update about dhoni
உலகின் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் இதயம் நொறுங்கி போகும் அளவிற்கு சோகமான ஒரு தருணத்தில் தனது கடைசி இன்னிங்க்ஸை முடித்துள்ளார் மகேந்திர சிங் தோனி. உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக அவர் ரன் அவுட்டான தருணம் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் இதயம் நொருங்கி போனது என்றே சொல்லலாம்.
அப்படி ஒரு சோகமான தருணத்தில் அதுவே அவருடைய கடைசி போட்டியாக இருக்கும் என்று பல ரசிகர்களும் அவருக்காக வருத்தப்பட்டார்கள். ஆனால் அவரோ ஓய்வை அறிவிக்காமல் மீண்டும் விளையாட வருவேன் என்பதனை சூசகமாக தெரிவித்து வருகிறார். ஆனால் அவர் தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்காமல் இருப்பது பல சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது. தற்போது அவர் ஏன் விளையாடவில்லை என்பது குறித்து புதிய காரணம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமைக்கு உரிய மகேந்திர சிங் தோனி உலக கோப்பை தொடருக்கு பின்னான மேற்கிந்திய தீவுகள் தொடர் மற்றும் தென்ஆப்பிரிக்க தொடர் அடுத்த நடக்க உள்ள பங்களாதேஷ் தொடரில் இருந்து விலகியுள்ளார். மேலும் அவர் மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியா வரும்போது அந்த தொடரில் பங்கேற்பார் எனவும் தகவல்கள் வெளியாகின்றன.
இந்நிலையில் அவருக்கு என்னதான் ஆயிற்று என்று பலரும் கேள்வி கேட்கத் தொடங்கி ஏகப்பட்ட விமர்சனங்கள் வரும் நிலையில், தற்பொழுது காரணமானது வெளியாகியுள்ளது. ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்ட செய்தியில் அவருக்கு ஐபிஎல் தொடரின் போது முதுகுப் பகுதியில் காயம் இருந்ததாகவும், அதன் காரணமாகவே அவர் மும்பை அணிக்கு எதிராக உள்ளிட்ட சில ஆட்டங்களில் விளையாடாமல் இருந்ததாகவும், அந்த காயம் உலக கோப்பை தொடருக்குப் பின் அதிகம் ஆகி விட்டதாகவும், இந்த நிலையில்தான் அவருக்கு மேலும் பின்னடைவாக மணிக்கட்டுப் பகுதியில் காயம் அடைந்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தக் காரணங்களாலேயே அவர் மேற்கொண்ட தொடர்களில் பங்கெடுக்காமல் ஓய்வு எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 2004 ஆம் ஆண்டு அறிமுகமான மகேந்திர சிங் தோனி உலக கோப்பை தொடர் வரை காயத்தினால் விலகிவிடுவது என்பது எப்போதாவது நடைபெறும் அரிதான நிகழ்வுதான். அவர் அவ்வளவு கட்டுக்கோப்பாக தனது உடலை பராமரித்துக் கொள்ளும் சிறந்த வீரர் எனப் பெயர் பெற்றவர். அப்படிப்பட்ட மகேந்திர சிங் தோனி தற்போது காயத்தால் அவதிப்பட்டு வருகிறார் என தகவல்கள் கிடைத்துள்ளது.
மீண்டும் எப்போது களத்திற்கு திரும்புவார் என அவருடைய கோடான கோடி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், அவர் இதுகுறித்து பிசிசிஐகோ அல்லது ஊடகங்களுக்கு இதுவரை எவ்வித அதிகாரபூர்வமான தகவல் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கில நாளிதழில் வெளியான செய்தி உண்மையா எனவும் அவர் வெளிப்படுத்தவில்லை. தோனியினுடைய ஓய்வு என்பது யாருமே அறியாத ரகசியமாகவே இருந்து வருகிறது.