ஸ்டாராக ஜொலித்த போட்டியில் நவ்தீப் சைனிக்கு ஏற்பட்ட சோகம்! ஐசிசி வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்!
navdeep saini get icc official warning and one demerit point
புளோரிடாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்தியாவின் முதல் டி 20 ஐ ஆட்டத்தின் போது இந்தியாவின் நவ்தீப் சைனி ஐ.சி.சி நடத்தை விதி முறையை மீறியதற்கான அதிகாரப்பூர்வ எச்சரிக்கையைப் பெற்றுள்ளார்.
அவர் வீரர்கள் மற்றும் துணை ஊழியர்கள் ஐ.சி.சி நடத்தை விதிகளின் 2.5 வது பிரிவை மீறியதாகக் கண்டறியப்பட்டது, இந்த விதியானது சைகை மற்றும் கள நடவடிக்கை தொடர்பானது ஆகும். மேலும் அவருக்கு தண்டனை புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.
அந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கின் போது 4 வது ஓவரில் சைனி பந்துவீச்சில் நிக்கோலஸ் பூரனின் விக்கெட்டை வீழ்த்திய போது இந்த துன்பகரமான சம்பவத்தை செய்துள்ளார். மேலும் மேலும், முறையான விசாரணை தேவையில்லை என போட்டி நடுவர் ஜெஃப் க்ரோவ் தெரிவித்துள்ளார்.
English Summary
navdeep saini get icc official warning and one demerit point