#IPL2021: யார்கர் மன்னன்., நம்ம நட்டு வீசிய ஆறு பந்தும்., அடி தூள்.!  - Seithipunal
Seithipunal


14 வது ஐபிஎல் தொடரில், இன்று 3-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில், வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.

டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் ஆரம்பமே அதிரடியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக நிதிஷ் ராணா மற்றும் ஷுப்மன் கில் 50 ரன்கள் அதிரடியாக சேர்த்தது.

கில்லை 15 ரன்களில் ஆட்டமிழக்க ராணாவுடன் ஜோடி சேர்ந்த திரிபாதி வான வேடிக்கை நிகழ்த்தினர். அரைசதம் அடித்த திரிபாதி (29 பந்துகள் 53 ரன்கள்) நடராஜனிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

ராணா 56 பந்துகளில் 80 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. 

இந்த ஆட்டத்தில், தமிழகத்தை சேர்ந்த நடராஜன் 19-வது ஓவரை வீசினார். அவர் வீசிய இந்த ஊரின் ஆறு பந்துகளும் யார்க்கராக வீசி அசத்தினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரி உட்பட 9 ரன்களை கோலத்தை அணி வீரர்கள் எடுத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NATRAJAN 19TH OVER


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->