நடராஜனுக்கு பெருமை : இந்தியாவின் முதல் வீரர்! சர்வதேச அளவில் 17 ஆவது வீரர்!  - Seithipunal
Seithipunal


இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியானது இன்று பிரிஸ்பேனில் தொடங்கியது. இந்த போட்டிக்காக இந்திய அணி  ஆடும் லெவனை தேர்வு செய்வதில் மிகப் பெரிய சிரமம் ஏற்பட்டது. 

கடந்த போட்டியில் விளையாடிய ரவீந்திர ஜடேஜா ரவிச்சந்திரன் அஸ்வின், ஹனுமா விஹாரி, ஜஸ்பிரிட் பும்ரா  இந்த போட்டியில் விளையாடவில்லை. அவர்களுக்கு மயங்க் அகர்வால் தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன், தாக்கூர் ஆகிய 4 பேரும் அணியில் இணைந்துள்ளனர். தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் இருவருமே தமிழக வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த தொடரின் 2வது போட்டியில் சிராஜ், மூன்றாவது போட்டியில் நவதீப் சைனி ,இன்றைய போட்டியில் நடராஜனும் வாஷிங்டன் அறிமுக வீரர்களாக களம் இறங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த போட்டியில் நடராஜன் அறிமுகமானது மூலம், ஒரே தொடரில் அனைத்து விதமான போட்டிகளிலும் அறிமுகமாகும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுகிறார். சர்வதேச அளவில் 17 ஆவது வீரராக களமிறங்குகிறார். 

அதேபோல ஒரே சீசனில் மூன்று விதமான போட்டிகளிலும் அறிமுகமான இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெறுகிறார். முன்னதாக புவனேஷ்குமார் (2012 - 2013) ஆண்டில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடருக்காக ஆஸ்திரேலியாவிற்கு நெட் பவுலராக தான் நடராஜன் தேர்வு ஆனார். வருண் சக்கரவர்த்தி 20 ஓவர் போட்டி தொடரில் விலகிய நிலையில், அவர் இந்திய அணியில் இடம்பிடித்தார். பின்னர் வீரர்களின் காயம் காரணமாக ஒருநாள், டெஸ்ட் அணிகளில் இடம்பிடித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Natarajan debut in all formats in same series


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->