கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யாத உலக சாதனையை செய்த 'தல டோனி'!!
msdhoni new world record
இங்கிலாந்தில் நேற்று நடைபெற்ற உலககோப்பையின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. சூழலுக்கு ஏற்றவாறு இந்திய பந்துவீச்சாளர்கள் பந்தை வீசினார்கள். வில்லியம்சன் 67 ரன்கள், டெய்லர் 67 ரன்களுடன் களத்தில் இருந்த நிலையில். 46.1 ஓவரின் போது மழை அதிகமானதால்,211 ரன்களை 5 விக்கெட் இழப்பிற்கு எடுத்திருந்த போது ஆட்டம் நிறுத்தப்பட்டது.
நேற்றைய போட்டியில் விளையாடியதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். நேற்றைய போட்டி டோனிக்கு 350வது போட்டியாகும். இதன்மூலம் 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பத்தாவது வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.
மேலும் இந்திய அணியை பொறுத்தவரை சச்சினுக்கு பிறகு 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் எனும் பெருமையை டோனி பெற்றார். குறிப்பாக சொல்லவேண்டுமானால், ஒரு விக்கெட் கீப்பராக 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் எனும் புதிய உலக சாதனையை டோனி படைத்துள்ளார்.
டோனிக்கு முன்னதாக இலங்கை அணியின் சங்ககரா டோனியை விட அதிகமாக 360 ஒருநாள் போட்டிகளில் பங்குப் பெற்றாலும், 44 போட்டிகளில் விக்கெட் கீப்பராக பங்குப்பெறவில்லை. கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை ஒரு விக்கெட் கீப்பராக 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் எனும் புதிய உலக சாதனையை டோனி படைத்துள்ளார்.
இது மட்டுமல்லாமல் 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய டோனி 200 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட முதல் இந்திய வீரர் எனும் பெருமையையும் டோனி படைத்துள்ளார்.