வெற்றிக்கு பின் தோனி கூறிய அந்த ஒரு வார்த்தை?! கண்ணீரில் மிதந்த ரசிகர்கள்!  - Seithipunal
Seithipunal


13 வது ஐபிஎல் சீசன் தொடரில் நேற்று நடந்த 18வது ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றது. நேற்று துபாயில் இரவு 7 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 17.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய ஷேன் வாட்சன் - டு ப்லஸ்ஸி ஜோடி ஆரம்பம் முதல் வெற்றி வரை அதிரடியாகவும், நிதானமாகவும் மைதானத்தை தெறிக்க விட்டனர்.

முதல் ஆட்டத்தில் மட்டுமே வெற்றி கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்து ஆடிய மூன்று ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது. நேற்று ஆடிய ஐந்தாவது ஆட்டத்தில் சென்னை அணி அபாரமாக ஆடி மிகப்பெரிய ஒரு வெற்றியை எடுத்து உள்ளது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் சென்னை அணி கடைசி இடத்திலிருந்து 6 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்த வெற்றிக்குப் பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி அளித்த பேட்டியில், "இந்த ஆட்டத்தில் சின்னச்சின்ன விஷயங்களை நாங்கள் சரியாகவும், நேர்த்தியாகவும் செய்து முடித்திருக்கிறோம் என்று நான் நம்புகிறேன். இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. எங்கள் அணிக்கு இப்படிப்பட்ட ஒரு தொடக்கம்தான் தேவைப்படுகிறது. அடுத்து வரும் ஆட்டங்களில் இதேபோன்ற ஒரு தொடக்கத்தை எதிர்பார்க்கலாம். வெற்றியும் எதிர்பார்க்கலாம். இதனை நான் முழுமையாக நம்புகிறேன்" என்று கேப்டன் மகேந்திரசிங் தோனி தெரிவித்துள்ளார்.

முந்தைய ஆட்டத்தில் தோனி ரன் எடுக்க ஓடிய போது, அவருக்கு மூச்சு வாங்கியதை தாங்கிக்கொள்ளாமல் அவரின் ரசிகர்கள் கண்ணீரில் மிதந்து கொண்டு இருந்தனர். தற்போது தோனி அளித்துள்ள பேட்டியில், இனி வரும் ஆட்டங்கள் சிறப்பாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் கூறி இருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ms dhoni talk about last match victory


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->