ஐபிஎல் தொடரில் இருந்து தோனி ஓய்வா.? அறிவிப்பை வெளியிட்ட தோனி.!! - Seithipunal
Seithipunal


நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சற்று தாமதமாக தொடங்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.  ஐபிஎல் தொடரில் முதல் முறையாக சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது. தோனி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பிறகு அவர் பங்கேற்ற முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. 

மேலும், சென்னை அணியின் தொடர் தோல்வியால் ஐபிஎல் போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெறுவாரா? என்ற கேள்வியும் எழுந்தது. மேலும் மற்ற அணி வீரர்கள் தோனியின் ஜெர்ஸியை வாங்கி புகைப்படம் எடுத்தது, மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

நேற்று நடைபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது கடைசிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணியின் சார்பில் தோனி தொடர்ந்து விளையாடுவார் என உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தோனியின் ஜெர்ஸியை மற்ற அணி வீரர்கள் வாங்கியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த தோனி, நான் ஓய்வு பெறுவதாக அவர்கள் நினைத்திருக்கலாம். சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ஐபிஎல் தோரில் ஓய்வு பெறுவேன் என நினைத்து இருப்பார்கள் என கூறினார். மேலும், அடுத்தாண்டு போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ms dhoni says about next year ipl match


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->