என்னுடைய கடைசி ஐபிஎல் போட்டி.. ரசிகர்களுக்கு தோனி வெளியிட்ட செய்தி.!!
ms dhoni ipl farewell match in chennai
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டது. தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில், சென்னை ரசிகர்களிடையே தோனி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது தன்னுடைய கடைசி ஐபிஎல் போட்டி சென்னையில் ரசிகர்கள் காணாமல் என்று நம்புவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இதன் மூலம் அடுத்த வருடம் தான் நிச்சயம் ஐபிஎல்க்கு வருவேன் என அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
English Summary
ms dhoni ipl farewell match in chennai