டாஸ் வின் செய்த பின், தோனி எழுப்பிய கேள்வி! அதிர்ச்சியில் உறைந்த நடுவர்கள்!  - Seithipunal
Seithipunal


நேற்று முன்தினம் தொடங்கிய ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் அம்பத்தி ராயுடு 71 ரன்கள் எடுத்து ஆட்டம் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இந்த போட்டியில் தோனியை ஆட்டத்தை கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக காணாத அவரின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தோனி முதல் பந்தில் நடுவரின் தவறான தீர்ப்பால் அவுட் அறிவிக்கப்பட்டு பின், மூன்றாவது நடுவரின் பார்வையில் தோனி அவுட் இல்லை என்று ஆனது. அடுத்து ஒரு பந்தை மட்டுமே சந்திக்க தோனிக்கு வாய்ப்பு கிடைத்தது. 2 பந்துகளை மட்டுமே சந்தித்த தோனி ரன் எதுவும் எடுக்கவில்லை. இதனால் தோனியின் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த போட்டியில் மகேந்திர சிங் தோனி டாஸ் வின் செய்த பின் நடுவரிடம் ஒரு கேள்வி ஒன்றை எழுப்பினார். தோனியின் அந்த கேள்வி, "போட்டியின்போது சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கு முன் நடுவர்களிடம் ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். ஃபர்ஸ்ட் ஸ்லீப் நிற்க வைக்கலாமா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்" என்ற மகேந்திர சிங் தோனி தெரிவித்தார்.

மகேந்திர சிங் தோனியின் கேள்வியை கேட்டு நடுவர்கள் சற்று நேரம் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். பின்னர் அவர் அந்த கேள்வியை கேலியாக தான் கேட்டார் என்பதை அறிந்த முரளி கார்த்திக் உட்பட அங்கிருந்த அனைவரும் சிரிக்கத் தொடங்கினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ms dhoni ask question to umpire


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->