மேடையில் உள்ள அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த இந்தியாவின் வீர மங்கை 'மேரி கோம்'.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் வீர மங்கை என்று அழைக்கப்படும் மேரி கோம், மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் இதுவரை உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு இந்தியாவிற்கு 5 தங்கம், 1 வெள்ளியை பெற்று தந்துள்ளார். இவர் இந்தியாவிற்கு தனது முதல் தங்க பதக்கத்தினை 16 வருடங்களுக்கு முன் பெற்று தந்தார்.

கடந்த 2010 ஆம் ஆண்டில், 48 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றார். உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் அயர்லாந்து நாட்டு வீராங்கனை கேட்டி டெய்லருக்கு இணையாக பதக்கங்களை குவித்திருந்த மேரி கோம் இந்த போட்டியில் பெற்ற வெற்றியால் அதிக பதக்கங்களை குவித்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

கடந்த வாரம் புதுடெல்லியில் நடந்த 48 கிலோ எடை பிரிவிற்கான உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட மேரிகோம், உக்ரைனின் ஹன்னா ஒகோட்டோவை எதிர்கொண்டு 5-0 என்ற புள்ளி கணக்கில் ஒகோட்டோவை வீழ்த்தி மேரி கோம் 6வது முறையாக தங்க பதக்கத்தினை  வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் இது உலக சாதனை ஆகும். 

marykom

இவரின் இந்த வெற்றியை நாடே கொண்டாடியது, குடியரசு தலைவர், பிரதமர், அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர். இன்னியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மேரி கோம், பாட்டு பாடி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MARY KOM SING A SONG


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->