#BigBreaking : இந்தியாவுக்கு சற்றுமுன் மூன்றாவது பதக்கம் கிடைத்தது.! அதிர்ச்சியில் இந்திய மக்கள்.!
LOVLINA LOSS
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது. ஒரு பதக்கம் நிச்சயம் உறுதியாகியுள்ளது.
பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவரைத் தொடர்ந்து மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிட்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி வி சிந்து வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
மேலும், இந்திய வீரர்களும் பதக்கங்களை வெல்வதற்கு இன்று அடுத்தடுத்து வெற்றி பெற்று முன்னேறியுள்ளனர். இதேபோல் இந்தியாவுக்கு லவ்லீனா ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
இன்று குத்துச்சண்டை வெல்ட்டர் வெயிட் (69 கிலோ) பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போரோகைன் அரையிறுதி போட்டியில் துருக்கி வீராங்கனையை எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில், நம் வீராங்கனை போராடி தோற்றார்.
லவ்லீனா நிச்சயம் தங்கம் வெல்வார் என்று மொத்த இந்திய மக்களும் எதிர்ப்பது கொண்டு இருந்தனர். இந்த தோல்வியின் மூலம் அவருக்கு தங்கம், வெள்ளி பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு பறிபோகியது. இருப்பினும் அவர் வெண்கல பதக்கம் வென்று உள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு முன்றாவது பதக்கம் கிடைத்துள்ளது.