களத்தில் முட்டி மோதிக்கொண்ட கோலி, ஸ்டோக்ஸ்! நடந்தது என்ன?! வெளியான சம்பவம்!
Kohli and stokes exchange the word in field
இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஆனது இன்று அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் மீண்டும் ஒருமுறை முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.
இங்கிலாந்து அணி தரப்பில் கடந்த போட்டியில் விளையாடிய ஜாப்ரா ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராட் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக பேட்ஸ்மேன்கள் லாரன்ஸ் டாம் பேஸ் ஆகிய இருவரையும் சேர்த்தார்கள். இந்திய அணி தரப்பில் சொந்த விஷயங்கள் காரணமாக விலகிய ஜஸ்பிரித் பும்ராவிற்கு பதிலாக மொகமது சிராஜ் இணைக்கப்பட்டார்.
ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் அக்ஷர் பட்டேல் 4 விக்கெட்டுகளையும் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் சிராஜ் 2 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் எடுத்துள்ளார்கள்.
முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. கில் ரன் கணக்கை தொடங்காமலே ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் மேற்கொண்டு விக்கெட் விழாமல் ரோஹித், புஜாரா ஆட்டத்தினை முடித்தனர். ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்களை எடுத்துள்ளது.
இந்த ஆட்டத்தின் நடுவே ஸ்டோக்ஸ், கோலி வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். சிராஜ் வீசிய பந்துக்கு ஸ்டோக்ஸ் ஏதோ கூற, கோலியை அழைத்த சிராஜ், ஏதோ சொல்கிறார் என கோர்த்துவிட, இந்த வார்த்தை மோதல் ஆனது நடைபெற்றுள்ளது, இன்றைய ஆட்டம் முடிந்த பிறகு தெரிய வந்தது.
English Summary
Kohli and stokes exchange the word in field