மீண்டும் மீண்டு வரும் ரெய்னா?! காசி விசுவநாதனின் அதிமுக்கிய அறிவிப்பு.!
kasi visvanadhan speech about suresh raina arrival
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி பலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இருப்பினும் நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டு தோல்விகளை சிஎஸ்கே சந்தித்துள்ளது. இதற்கு காரணமாக சென்னை அணியின் பேட்டிங் ஆர்டர் தான் கூறப்படுகிறது. ஓபனிங் வீரர்கள் சரியாக ஆடவில்லை.
அம்பத்தி ராயுடு ஓய்வில் இருக்கின்றார். சிஎஸ்கே வில் டுப்லஸ்ஸிஸ் மட்டும்தான் அதிரடியாக விளையாடி வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சுரேஷ் ரெய்னா அணிக்கு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்ததை காண முடிகிறது. இதுகுறித்து தலைமை செயல் அதிகாரி காசிவிசுவநாதன் அதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேட்டி அளித்த அவர் தொடரில் இருந்து விலகும் முடிவை சுரேஷ் ரெய்னா தான் எடுத்தார். அவர் எடுத்த முடிவை நாங்கள் மதிக்கிறோம். எனவே தற்போது அவருடைய வருகை குறித்து யோசிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அணியின் தோல்வி குறித்து பேசிய சீனிவாசன் விளையாட்டில் வெற்றி, தோல்வி என இரண்டுமே இருக்கும். சென்னை அணி பலம் வாய்ந்த அணியாக திரும்பி மீண்டும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அத்துடன் அம்பத்தி ராயுடு தற்போது குணமடைந்து போட்டிக்கு தயாராக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
kasi visvanadhan speech about suresh raina arrival