இளம் இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்.! அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.!!
kashmir ciricket player died.
இந்தியாவில் இளம் கிரிக்கெட் வீரர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மாட்டான் பகுதியை சேர்ந்தவர் ஜஹாங்கீர் அஹமது வார் இவரின் வயது 18.
இவர் அரசு சார்பில் நடத்தப்பட்ட 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் நேற்று பங்கேற்றார் அப்பொழுது பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது பந்துவீச்சாளர் வேகமாக வீசியதில் அதில் பேட்ஸ்மேன் கழுத்தில் தாக்கியது. அந்த நொடியே அவர் மயங்கி கீழே விழுந்தார் அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர் ஆனால் அதை சோதித்து பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
வார் ஷார்ட் பந்தை அடிக்க முயன்ற போது பந்து மிஸ்ஸாகி கழுத்தை தாக்கியது அவர் உடனே சுய நினைவின்றி மயங்கி விழுந்துவிட்டார் ஹெல்மெட் அணிந்து இருந்தும் பந்து தாக்கி இருக்கிறது. இதனால் தான் அவரது உயிரிழந்துள்ளார் என மருத்துவர் ரகுமான் தெரிவித்தார் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ஜஹாங்கீர் அஹமது வார் பதினோராம் வகுப்பு படித்து வந்தார்.
English Summary
kashmir ciricket player died.