உலக கோப்பை : அடுத்து வரும் இரண்டு போட்டிகளில் இருந்து விலகிய தொடக்க வீரர்... அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
jason roy rolled out of 2 match in world cup
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி அபாரமாக வெற்றி பெற்று உள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 22 வது லீக் போட்டியில் இந்திய அணி அபாரமாக வென்றது. இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றது. இன்று நடைபெறும் 23வது லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும்,வங்காளதேசம் அணியும் மோதுகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் பேட்டிங் செய்தபோது காயமடைந்தார். இதனால் அடுத்த இரு போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தசைநார் கிழிவு ஏற்பட்டுள்ளதால் ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டிகளால் ஜேசன் ராய் இடம்பெற மாட்டார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த வாரம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அவர் இடம்பெறுவது குறித்து இனிமேல்தான் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.
English Summary
jason roy rolled out of 2 match in world cup