ரோகித்தை தொடர்ந்து.. அர்ஜுனா விருதை பெரும் கிரிக்கெட் வீரர் மற்றும் லேடி கிரிக்கெட்டர்.!
ishanth sharma and dheepthi sharma will get arjuna award
மிக உயரிய விருதாக விளையாட்டுத்துறையில் கருதப்படும் கேல் ரத்னா விருதை விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் பல துறையைச் சேர்ந்தவர்களுக்கும் வருடந்தோறும் வழங்கப்படும்.
இந்த நிலையில் கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகள் யாருக்கு வழங்கப்பட இருக்கிறது என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. மாரியப்பன் மற்றும் மணிக்கா பத்ரா மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் ஆகியோருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல இந்திய கிரிக்கெட் வீரரான ரோகித் சர்மாவுக்கும், ஹாக்கி வீராங்கனை ராணிக்கும் இந்த விருது அளிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு துறையை சேர்ந்த பல்வேறு பிரிவுகளில் 27 பேருக்கு அர்ஜூனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கும் அர்ஜுனா விருது வழங்கப்பட இருக்கின்றது.
மேலும், தடகள வீராங்கனை டூட்டி சந்த், கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா, துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், கோல்ப் வீராங்கனை அதிதி அசோக், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது. வரும் 29ஆம் தேதி காணொளி வாயிலாக வீரர் மற்றும் வீராங்கனைகள் ஜனாதிபதி விருது வழங்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
ishanth sharma and dheepthi sharma will get arjuna award