வெறும் 2 ரன்னில் முடிந்தது சோலி! நேற்றைய ஆட்டத்தின் சிறப்பான சம்பவம்!
ipl Punjab vs dc match result
ஐபிஎல் தொடரின் நேற்றைய இரண்டாவது ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி, டெல்லி கேப்பிடல் அணி வெற்றி பெற்றுள்ளது.
13வது ஐபிஎல் தொடரின் நேற்றைய இரண்டாவது போட்டியில் டெல்லி கேப்பிடல் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. ஸ்டாய்னிஸ் 20 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 53 ரன்கள் விளாசினார்.
இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி, 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது.
இதையடுத்து, சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி 2 விக்கெட்டுக்கு 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
English Summary
ipl Punjab vs dc match result