அணிமாறும் அஸ்வின்., புதிய கேப்டனாக பொறுப்பேற்கும் இளம் வீரர்..!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருக்கும் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஷ்வினை அந்த அணி விடுவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு சீசனுக்கான போட்டிக்கு முன் நடைபெற்ற ஏலத்தில், அஷ்வினை மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் சுமார் 7.6 கோடி கொடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அவரை ஏலம் எடுத்தது. 

இந்த செய்தி குறித்த முழு வீடியோ பதிவு: 

இதுவரை கோப்பையை வெல்லாத பஞ்சாப் அணிக்கு அஷ்வின் வருகை பலம் சேர்க்கும் என ஏலம் எடுத்த வேகத்தில் அவரையே அணியின் கேப்டனாகவும் அறிவித்தது பஞ்சாப் அணி நிர்வாகம். அந்த அணியில் திறமை வாய்ந்த, உலகப்புகழ் பெற்ற வீரர்கள் பலர் இருந்தும், அந்த அணியால் லீக் சுற்றை கூட தாண்ட முடியவில்லை. அஸ்வின் தலைமையில் விளையாடிய இரண்டு வருடமும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை. முதல் வருடம் முதல் பாதியில் மிகச் சிறப்பாக விளையாடிய அந்த அணி, இரண்டாவது பாதியில் சொதப்பலாக விளையாடி, தொடரில் இருந்து வெளியேறியது. அதேபோல இரண்டாவது வருடமும் எதுவுமே மிக சிறப்பாக அமையவில்லை. 

இதையடுத்து அந்த அணியின் கேப்டனை மாற்றுவதற்கு அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  ஏற்கனவே அந்த அணியின் பயிற்சியாளர் பொறுப்புகளில் இருந்து வந்த நியூஸிலாந்தின் மைக் ஹஸ்ஸன் உள்ளிட்ட அனைவரும் நீக்கப்பட்ட நிலையில், தற்போது கேப்டனையும் நீக்குவதுடன், அவரை அணியில் இருந்தே வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது. முன்னதாக 2018 ஆம் ஆண்டு பஞ்சாப் அணியின் ஆலோசகராக இருந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் ஷேவாக், அந்த அணியின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து 2019 சீசனுக்கு முன்னரே வெளியேறியது குறிப்பிடத்தக்கது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ipl Punjab caption changed by Punjab cricket team


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->