ரமலான் நோன்பு இருந்து கொண்டே ஐபிஎல் விளையாடும் வீரர்கள்.? நெகிழ்ந்து பாராட்டிய சக வீரர்.!!
ipl players in fasting
ஐ.பி.எல் போட்டியில் ரமலான் நோன்பு இருந்துகொண்டே ஹைதராபாத் வீரர்கள் ரஷித் கான் மற்றும் முகமது நபி விளையாடியதாக ஷிகர் தவான் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
12வது சீசன் ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில் தற்போது ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் சென்னை அணியை தோற்கடித்து மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது
இதனை அடுத்து, விசாகப்பட்டினத்தில் நடந்த எலிமினேட்டர் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டெல்லி அணி கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், டெல்லி அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் இஃப்தார் நோன்பு இருந்துகொண்டே ஹைதராபாத் வீரர்கள் ரஷித் கான் மற்றும் முகமது நபி விளையாடியதாக ஷிகர் தவான் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அதில், அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகள் இவர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். ஒரு நாள் முழுவதும் நோன்பு இருந்துகொண்டே போட்டியில் விளையாடுவது அவ்வளவு எளிதானதில்லை. இது சர்வதேச கிரிகெட் மற்றும் அவர்களது நாட்டிற்கு முன்னுதாரணமாக இருக்கும். உங்களுடைய ஆற்றல் எல்லோரும் பெரிய கனவுகளை காண தூண்டுகிறது. அல்லாவின் ஆசீர்வாதம் உங்களுடன் இருக்கும் என கூறியுள்ளார்
இதற்கு ஏரளாமான கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அத்துடன், இவர்களுடன் இந்திய வீரர்களும் நோன்பு துறந்த புகைப்படத்தை ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.