ஒரே ஆள் 5 விக்கெட் காலி., பஞ்சாப் அணிக்கு இமாலய இலக்கு.!
IPL PBKS vs RR
14-வது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று நடக்கிறது. இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்ச முடிவு செய்தார்.
அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய எவின் லீவிஸ் 21 பந்துகளை சந்தித்து 36 ரன்களை எடுத்தார். யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி அரைசதம் எடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், 49 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 4 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார், லியாம் லிவிங்ஸ்டோன் 25 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய மஹிபால் லாம்லோர் 17 பந்துகளில், 4 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் உட்பட 43 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 20 ஓவர் முடிவில் 185 ரன்கள் எடுத்துள்ளது.
186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்க உள்ளது.
பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்களை எடுத்து அசத்தினார். முகமத் ஷமி 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
அணி வீரர்கள்: