ஐபிஎல் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது.! பிசிசிஐ உற்சாக தகவல்.!  - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள், ஐபிஎல் போட்டிகள் என அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. 2020 ஐபிஎல் போட்டியானது, கால வரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. 

மேலும், ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை திட்டமிடப்பட்ட டி20 உலக கோப்பை தொடர் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து ஜூன் 1௦-இல் ஐசிசி கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் குறைந்து இருக்கிறது எனவே இறுதி முடிவை சற்று தாமதமாக எடுக்க திட்டமிடப்பட்டது.

அந்த தொடரானது ஒத்தி வைக்கப்பட்டால் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு இருக்கின்றது. இதுகுறித்து, பிசிசிஐ தரப்பு, "ஐபிஎல் போட்டியை எங்கு நடத்துவது என்று முடிவு செய்யப்படவில்லை. அதிகபட்சமாக வெளிநாட்டில் நடக்க வாய்ப்பு இருக்கின்றது. இந்தியாவில் ஐபிஎல் போட்டியை நடத்த சாதகமான சூழல் அமையவில்லை. இலங்கையிலோ அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திலோ போட்டியை நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றது." என்று தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரானது கட்டாயம் நடத்தப்படும் என்று பிசிசிஐ மறைமுகமாக உணர்த்தியுள்ளதால் ஐபிஎல் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ipl may be in foreign countries.


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->