இலக்கை நிர்ணயம் செய்த சன் ரைஸஸ்... நெஞ்சை பிடிக்க துவங்கும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


ஐ.பி.எல் போட்டித்தொடர் கொரோனா காரணமாக பாதுகாப்பு விதிமுறைகளுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய நாளில் சன் ரைஸஸ் ஹைதராபாத் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்சுக்கும் போட்டியானது நடைபெற்றது.. 

இந்த போட்டியில் வழக்கம்போல சி.எஸ்.கே டாஸ் வேண்டு பேட்டிங் பீல்டிங் தேர்வு செய்யும் என்று எதிர்பார்த்த நிலையில், எஸ்.ஆர்.எச் டாஸை வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்த போட்டியிலாவது சென்னை வெற்றிவாகை சூடுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். 

இன்றைய போட்டியை பொறுத்த வரையில் சென்னையில் அணியின் வெற்றியை அனைவரும் எதிர்பார்த்து இருந்தாலும், சி.எஸ்.கே இந்த போட்டியில் சுதாரித்துக்கொண்டதால் 10 ஓவர் முடிவில் 69 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தது. மேலும், அடுத்தடுத்து 2 விக்கெட் என மொத்தமாக 10 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை சி.எஸ்.கே எடுத்திருந்தது.

இதனையடுத்து இரண்டு கேட்ச்களை அடுத்தடுத்து தவறவிட்டது, எஸ்.ஆர்.எச் அணியின் ரன்களை குவிக்க உதவி செய்தது. இறுதியாக 18 ஓவரின் துவக்கத்தில் தோனியின் கையால் விக்கெட் ஒன்று வீழ்த்தப்பட்டது. ஆனால், விக்கெட்டுகளை சி.எஸ்.கே அணியினர் அடுத்தடுத்து பறிகொடுத்தது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இந்த போட்டியின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த எஸ்.ஆர்.எச் 164 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கவுள்ளது. ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றியை எடுத்த களைப்பில், அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியை தழுவிய நிலையில், இன்றைய போட்டியின் முடிவு எப்படி இருக்கும் என்பதை அவர்களின் ஆட்டம் தான் முடிவு செய்யும். காத்திருப்போம். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL CSK VS SRH MATCH 2 OCTOBER 2020


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->