#RCB Vs PBKS : பஞ்சாபின் அதிரடி ஆட்டத்தால் சிதறிப்போன பெங்களூர்.. வெளுத்தெடுத்த கே.எல் ராகுல்..!! - Seithipunal
Seithipunal


கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இன்றைய (30/04/2021) தினத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் - பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகிறது. இன்றைய போட்டியில், பெங்களூர் அணி வெற்றிவாகை சூடுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். 

பெங்களூர் அணி சார்பாக வி கோஹ்லி, டி பாடிக்கல், ஆர் பட்டிதர், ஜி மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், எஸ் அகமது, டி சாம்ஸ், கே ஜேமீசன், எச் படேல், எம் சிராஜ், ஒய் சாஹல் ஆகியோர் விளையாடுகின்றனர். பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பாக கே.எல்.ராகுல், பி சிங், சி கெய்ல், என் பூரன், டி ஹூடா, எஸ் கான், ஆர் மெரிடித், ஆர் பிஷ்னோய், எம் ஷமி, சி ஜோர்டான், எச் பிரார் ஆகிய வீரர்கள் களமிங்குகின்ற்னர். இன்று டாஸை வென்ற பெங்களூர் அணி பீல்டிங் தேர்வு செய்த நிலையில், பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய தயாரானது.

பஞ்சாப் அணியின் சார்பாக தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல் ராகுல் - பி. சிங் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சேர்ந்து 2.3 ஓவரில் 14 ரன்கள் எடுத்திருந்தனர். கே.எல் ராகுல் அடித்து ஆட தொடங்கினார். பி. சிங் 7 பந்துகளில் 7 ரன்கள் அடித்து அவுட்டாகி வெளியேற, களத்தில் கே.எல் ராகுல் - கெயில் ஜோடி இருந்தது. கே.எல் ராகுல் - கெயில் ஜோடி களத்தில் நின்று ஆடிய நிலையில், 7 ஆவது ஓவரில் கே.எல் ராகுல் 22 பந்துகளில் 19 ரன்களும், கெயில் 13 பந்துகளில் 36 ரன்களும் அடித்திருந்தார். பஞ்சாப் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்திருந்தது. 

கெயில் 10.4 ஆவது ஓவரில் 24 பந்துகளில் 46 ரன்கள் அடித்து கேட்ச் அவுட்டாகி வெளியேறினார். இதன்போது, பஞ்சாப் அணி 2 விக்கெட் இழந்து 99 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல் ராகுல் 33 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்தார். இதனையடுத்து, களத்தில் கே.எல் ராகுல் - பூரான் ஜோடி இருந்தது. பூரான் 3 பந்துகளில் ரன்கள் ஏதும் எடுக்காமல், களத்தில் இறங்கிய சில நிமிடத்திற்கு உள்ளாகவே அவுட்டாகி வெளியேறினார். 

பூரானின் விக்கெட்டை தொடர்ந்து கே.எல் ராகுல் - ஹூடா ஜோடி களத்தில் இருந்தது. தீபக் ஹூடா 9 பந்துகளில் 5 ரன்கள் அடித்து வெளியேறியிருந்தார். 14 ஆவது ஓவரில் 4 விக்கெட்டை இழந்திருந்த பஞ்சாப் அணி 117 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல் ராகுல் - ஷாருக்கான் ஜோடி களத்தில் இருந்த நிலையில், 14.4 ஆவது ஓவரில் ஷாருக்கான் 3 பந்துகளில் ரன்கள் ஏதும் அடிக்காமல் போல்ட் அவுட்டாகி ஆட்டமிழந்து வெளியேறினார். 

ஷாருக்கானின் விக்கெட்டை தொடர்ந்து கே.எல் ராகுல் - ஹர்பீத் ஜோடி களத்தில் இறங்கியது. ஹர்சத் தொடர்ந்து இறுதி மூன்று ஓவர்களில் அடித்து ஆட, அணியின் ரன்கள் அதிரடியாக உயர்ந்தது. கே.எல் ராகுல் இறுதி வரை விக்கெட்டை இழக்காமல் தக்க வைத்து 57 பந்துகளில் 91 ரன்கள் அடித்திருந்தார். ஹர்பீத் 17 பந்துகளில் 25 ரன்கள் அடித்து அசத்தினார். ஆட்டத்தின் இறுதியில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழந்து 179 ரன்கள் அடித்தது. இதனால் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கவுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2021 RCB Vs PBKS Match PBKS Declare 180 Runs to Win RCB


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->