#IPL_Breaking: CSK Vs MI: நொறுக்கியெடுத்த சென்னை சிங்கங்கள்.. மிரண்டுபோன மும்பை.. தரமான சம்பவங்கள்..!! - Seithipunal
Seithipunal


கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டித்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. 27 ஆவது போட்டித்தொடர் இன்று (01/05/2021) நடைபெறவுள்ள நிலையில், இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தியது.

இன்றைய போட்டி, புதுடெல்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இன்றைய போட்டியை காண ஏற்கனவே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், இன்று ஐ.பி.எல் தொடரின் இரு துருவங்களாக மற்றும் வெற்றிக்கே சொந்தக்காரர்களாகிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் - மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெறுவதால் ரசிகர்களிடையே ஆரவாரம் மற்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக எஃப் டு பிளெசிஸ், ஆர் கெய்க்வாட், எம் அலி, எஸ் ரெய்னா, ஏ ராயுடு, எம்.எஸ் தோனி, ஆர் ஜடேஜா, எஸ் குர்ரான், எஸ் தாகூர், டி சஹார், எல் என்ஜிடி ஆகிய வீரர்கள் களமிறங்குகின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பாக கியூ டி கோக், ஆர் ஷர்மா, எஸ் யாதவ், கே பாண்ட்யா, கே பொல்லார்ட், எச் பாண்ட்யா, ஜே நீஷம், ஆர் சாஹர், டி குல்கர்னி, ஜே பும்ரா, டி போல்ட் ஆகிய வீரர்கள் களமிறங்குகின்றனர். 

டாஸை வென்ற மும்பை அணி பீல்டிங் தேர்வு செய்துள்ள நிலையில், சென்னை அணி பேட்டிங் செய்ய தயாராகியுள்ளது. இன்று ஐ.பி.எல் 2021 கோப்பை தொடரில் மும்பை - சென்னை அணிகள் முதன் முதலாக மோத இருப்பதால், ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. 

சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய தொடங்கிய நிலையில், சென்னை அணியின் சார்பாக எப்.டூ ப்ளசிஸ் - ருத்ராஜ் கெய்க்வாட் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியது. மும்பை அணியின் சார்பாக முதல் ஓவரை டி. போல்ட் வீசினார். ருத்ராஜ் முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே சென்னை அணியின் ஃபோரை பதிவு செய்தார். பின்னர், 4 ஆவது பந்தில் கேட்ச் அவுட்டாகி வெளியேறினார். 4 பந்தில் 4 ரன்கள் அடித்த ருத்ராஜ் அவுட்டாகி வெளியேறினார். 

ருத்ராஜின் விக்கெட்டை தொடர்ந்து, எப்.டூ ப்ளசிஸ் - மொயீன் அலி ஜோடி களத்தில் இருந்தது. பாப் டூ ப்ளசிஸ் 2 ஆவது ஓவரில் தனது அணிக்கான சிக்ஸரை பதிவு செய்தார். இரண்டாவது ஓவரை மும்பை அணி சார்பாக குல்கர்னி வீசினார். இரண்டு ஓவரில் சென்னை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 15 ரன்கள் எடுத்திருந்தது. 4 ஓவரில் சென்னை அணி 33 ரன்கள் எடுத்திருந்தது. 6 ஓவர்களில் சென்னை அணி 49 ரன்கள் எடுத்திருந்தது. 

களத்தில் இருந்த எப்.டூ ப்ளசிஸ் 13 பந்துகளில் 17 ரன்கள் அடித்திருந்த நிலையில், மொயீன் அலி 19 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்தார். மும்பை அணியின் சார்பாக பந்து வீசிய டி போல்ட் 3 ஓவரில் 22 ரன்களும், குல்கர்னி 2 ஓவரில் 17 ரன்களும், பும்ரா 1 ஓவரில் 8 ரன்களும் அடிக்க சென்னை அணிக்கு வாய்ப்பு கொடுத்தனர். 7 ஆவது ஓவரில் சென்னை அணி 51 ரன்கள் அடித்திருந்தது. ஒரு விக்கெட்டை இழந்திருந்தது. 9 ஓவரில் சென்னை அணி 77 ரன்கள் எடுத்திருந்தது. 10 ஓவரில் சென்னை அணி 95 ரன்கள் எடுத்திருந்தது. 10.1 ஓவரில் பாப் டூ ப்ளசிஸ் சிக்ஸ் அடித்து, சென்னை அணியின் ஸ்கோரை 101 ஆக உயர்த்தினார். 

மொயீன் அலி 36 பந்துகளில் 58 ரன்களை அடித்து அவுட்டாகி வெளியேறினார். சென்னை அணி 10.5 ஓவரில் 112 ரன்கள் அடுத்து 2 விக்கெட்டை இழந்தது. மொயீன் அலியின் விக்கெட்டை தொடர்ந்து களத்தில், பாப் டூ ப்ளசிஸ் - சின்ன தல சுரேஷ் ரெய்னா ஜோடி களமிறங்கியது. பாப் டூ ப்ளசிஸ் 27 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அவுட்டாகி வெளியேறினார். சென்னை அணி 11.5 ஓவரில் தனது 3 ஆவது விக்கெட்டை பறிகொடுத்தது. 

பாப் டூ பிளஷிசின் விக்கெட்டை தொடர்ந்து, சுரேஷ் ரெய்னா - அம்பட்டி ராயுடு ஜோடி களத்தில் இறங்கியது. சுரேஷ் ரெய்னா 11.6 ஆவது ஓவரில் பாப் டூ பிளஷிசின் விக்கெட்டை தொடர்ந்து அவுட்டாகி வெளியேறினார். சுரேஷ் ரெய்னா 4 பந்துகளில் 2 ரன்கள் அடித்து அவுட்டாகி வெளியேறினார். சுரேஷ் ரெய்னாவின் விக்கெட்டை தொடர்ந்து அம்பட்டி ராயுடு - ரவீந்திர ஜடேஜா ஜோடி களத்தில் இறங்கியது. பொல்லார்ட் ஒரே ஓவரில் அடுத்தடுத்த விக்கெட்டை எடுத்த நிலையில், போலார்டின் பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல் ஜடேஜா - ராயுடு ஜோடி சற்று திணறியது. 

14 ஆவது ஓவரில் சென்னை அணி 126 ரன்கள் எடுத்திருந்தது. களத்தில் இருந்த ஜடேஜா 7 பந்துகளில் 2 ரன்களும், ராயுடு 5 பந்துகளில் 7 ரன்களும் எடுத்திருந்தனர். சென்னை அணி தனது 4 விக்கெட்டை இழந்திருந்தது. 16 ஆவது ஓவரில் சென்னை அணி 153 ரன்கள் அடித்திருந்தது. 17.3 ஓவரில் சென்னை அணி 177 ரன்கள் எடுத்திருந்தது. 

இறுதியில் களத்தில் இருந்த ஜடேஜா 22 பந்துகளில் 22 ரன்களும், ராயுடு 27 பந்துகளில் 72 ரன்களும் எடுத்திருந்தனர். இந்த ஆட்டத்தின் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு, 218 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கவுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2021 Match MI Vs CSK Match 1 May 2021 CSK Declare Runs to Win MI


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->