மும்பையுடன் மோத போகும் அணி எது.?! இன்றைய போட்டியின் மிகமுக்கிய இரு வீரர்கள் பற்றி வெளியான பரபரப்பு தகவல்.!! - Seithipunal
Seithipunal


13 ஐபிஎல் சீசன் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. ஐபிஎல் குவாலிபையர்-2 இன்று இரவு 7.30 மணிக்கு அபு தாபியில் நடக்க உள்ளது. இந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெரும் அணி, இறுதி போட்டியில் மும்பை அணியுடன் மோத உள்ளது. 

இன்றைய ஆட்டம் மிக கடுமையானதாகவும், லோ ஸ்கோர் ஆட்டமாகவும் அமையும்என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய ஆட்டத்தின் திருப்பு முனையாக கேன் வில்லியம்சன் அல்லது ஷிகர் தவான் அமைவார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், ‘‘ஷிகர் தவான் உலக கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ்ஷிப்பில் விளையாடியவர். அணிக்கு வெற்றி தேவைப்படும் போதெல்லாம் சிறப்பாக விளையாடி, அணியை வெற்றிபெற வைத்துவிடுவார். 

அதே சமயத்தில், சன்ரைசர்ஸ் அணியில் டேவிட் வார்னர் முக்கியமானவரோ, அதேபோன்று கேன் வில்லியம்சனும் முக்கியமானவர். கேன் வில்லியம்சன் ஆட்டம் போன்று மற்றவர்களால் ஆட முடியாது. அந்த அணியின் முக்கிய வெற்றிகளுக்கு துருப்புச்சீட்டாக கேன் வில்லியம்சன் உள்ளார்’’ என்று சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ipl 2020 srh vs dc match info


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->