பெங்களூர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!
IPL 2020 KKR vs RCB
13 வது ஐபிஎல் தொடரின் இன்றைய 39-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மான் கில், ராகுல் திரிபாதி ஆகியோர் களம் இறங்கினர். 2-வது ஓவரில் முகமது சிராஜ் வீச, ராகுல் திரிபாதி 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் நிதிஷ் ராணா ரன் ஏதும் எடுக்காமல் டக்-அவுட் ஆனார்.
நவ்தீப் சைனி வீசிய 3 வது ஓவரின் 2-வது பந்தில் ஷுப்மான் கில் 1 ரன் எடுத்து ஆட்டமிழக்க, கொல்கத்தாதா அணி 3 ரன்னில் 3 விக்கெட் இழந்து தத்தளித்தது. தினேஷ் கார்த்திக், பேட் கம்மின்ஸ் ஆகியோரை தலா 4 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
மோர்கனை 30 ரன்னில் ஆட்டமிழக்க, குல்தீப் யாதவ் - லூக்கி பெர்குசன் ஜோடி 27 ரன்கள் குவித்தது என்றுதான் சொல்ல வேண்டும். இறுதியில் கொல்கத்தா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் அடித்துள்ளது. பெங்களூர் அணியில் முகமது சிராஜ் 4 ஓவரில் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறஞ்சிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 13.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.