INDvsPAK : பாகிஸ்தானுடன் விளையாட மாட்டோம்! லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் ஆட்டம் ரத்து! - Seithipunal
Seithipunal


முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் எதிர்பார்த்திருந்த இந்தியா–பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 18 முதல் நடைபெற்று வரும் லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர், ஆகஸ்ட் 2 அன்று முடிவடைய உள்ளது. இதில் இந்தியா சாம்பியன்ஸ் அணியை யுவராஜ் சிங் தலைமையிலானுள்ளார். அவரது அணியில் ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, இர்ஃபான் பதான், யூசுஃப் பதான், ராபின் உத்தப்பா உள்ளிட்ட முன்னாள் தேசிய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இந்த தொடரில், ஜூலை 20 அன்று பர்மிங்க்ஹாமில் இந்தியா–பாகிஸ்தான் அணிகள் இடையே ஒரு ஆட்டம் நடைபெற திட்டமிடப்பட்டது. ஆனால், முக்கிய வீரர்கள் சிலர் பங்கேற்பில் இருந்து விலகினர். குறிப்பாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பாகிஸ்தானே நேரடியாகக் காரணம் எனக் கூறி, இந்திய முன்னாள் வீரர்கள் அந்த நாட்டுக்கு எதிராக விளையாட மறுத்துவிட்டனர்.

இதையடுத்து, பர்மிங்க்ஹாமில் நடைபெறவிருந்த இந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

INDvsPAK LWC match


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->