அணியின் தேர்வு நிறுத்தப்பட்டுள்ளது காரணம் என்ன? கிரிக்கெட் வாரியத்தில் பல மாற்றங்கள்.!   - Seithipunal
Seithipunal


இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் செல்ல உள்ளது மூன்று 20 ஓவர் 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது இதில் முதலாவதாக 20 ஓவர் போட்டி வருகிற 3ம் தேதி நடக்க உள்ளது இந்த தொடருக்கான இந்திய அணி இன்று 19ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியானது.

இதை தொடர்ந்து தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் தலைமையில் கமிட்டி குழு  மும்பையில் சென்று சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. எதிர்காலம் என்னவாகும் தொடரில் கேப்டன் விராட் கோலி முழுமையாக விளையாடுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக்கோப்பை படுதோல்வி எதிரொலியாக அணியில் அதிரடி மாற்றங்கள் இருக்குமா என்று பல்வேறு எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் திடீரென மேற்கிந்திய தீவு தொடருக்கான இந்திய அணியில் தேர்வு நிறுத்தப்பட்டுள்ளது வழக்கமாக அணி தேர்வு கூட்டத்தை இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் முன்னின்று நடத்துவர் ஆனால் இனிமேல் தேர்வு விஷயமாக நடக்கும் கூட்டங்களில் தேர்வுக்குழு தலைவர் தான் நடத்த வேண்டும் இதில் கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரோ தலைமை செயல் அதிகாரியாக கலந்து கொள்ள முடியாது என்று வாரியத்தின் நிர்வாக கமிட்டி உத்தரவிட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட அணி வீரர்களின் பட்டியல் கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் அனுமதி பெற்று வெளியிட வேண்டிய அவசியம் இல்லை ஏதாவது வீரர் மாற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டாலும் செயலாளர் அனுமதி தேவையில்லை என்று கூறி உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian team selection stoped


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->