இந்திய அணியின் அனைத்து வீரர்களும் சிறப்பாக ஆடி மலை போல் குவிந்த ரன்கள்!. டார்கெட்டால் மிரளும் நியூசிலாந்து அணி! - Seithipunal
Seithipunal



ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை வென்று உற்சாகத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. 

நேப்பியரில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஒரு நாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று காலை ஓவல் மைதானத்தில் தொடங்கியது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியின் துவக்க மட்டையாளர்களாக களமிறங்கிய ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் துவக்கத்திலேயே அதிரடியாக ஆட ஆரம்பித்து இருவரும் அரைசதத்தை எடுத்தனர்.

சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த தவான்  25.2 ஆவது ஓவரில் 66 ரன்களில்அவுட் ஆகி வெளியேறினார். மிகவும் சிறப்பாக சிக்சரும் பவுண்டரியுமாக அதிரடியாக அடித்து ஆடிய ரோகித் சர்மா 96 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார். விராட் கோலி 43 ரன்களும், அம்பத்தி ராயுடு 47 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். அடுத்ததாக தோனி சிறப்பாக ஆடி 48 ரன்களும், கேதர் ஜாதவ் 22 ரன்களும் எடுத்து இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 324 குவித்தது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian team played well second oneday match


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->