புதிய வீரர்களுடன் களத்தில் இறங்கும் இந்திய அணி.. 8 வீரர்கள் இன்று போட்டியில் இல்லை.?
indian team may be change
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் ஆல்ரவுண்டர் குர்னல் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டத்தை அடுத்து, அவருடன் நெருக்கமாக இருந்த 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த 8 வீரர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் எந்த வீரருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நடக்கும் 2வது டி20 போட்டியில் இந்த வீரர்கள் களம் இறங்க மாட்டார்கள் என கூறப்படுகிறது. இன்று நடைபெறும் 2வது டி20 போட்டியில் குர்னல் பாண்டியா உள்ளிட்ட ஒன்பது வீரர்கள் தவிர மற்ற வீரர்கள் தான் களமிறங்குவார் என தெரியவந்துள்ளது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணியில் 20 வீரர்கள் மற்றும் வலைப்பயிற்சிக்காக 4 பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி சென்றுள்ளது. இலங்கை-இந்திய அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடக்க இருந்து. குர்னல் பாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, வீரர்களுக்கு கொள்ள பரிசோதனை நடத்தப்பட்டது அதில் யாருக்கும் குர்னா தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.
இதனால், 2-வது டி20 போட்டி இன்று நடைபெறும் என அறிவித்துள்ளனர். மேலும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
English Summary
indian team may be change