முன்னரே விடுக்கப்பட்ட எச்சரிக்கை.? போட்டு புரட்டி எடுத்த இந்தியா - கேள்விக்குறியான கோப்பை கனவு.!
indian team dangers
உலக கோப்பை தொடரில் இந்திய அணி தன்னுடைய முதல் லீக் ஆட்டத்தில் நேற்று தென்ஆப்ரிக்க அணியை எதிர்த்து விளையாடியது.
தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்களை எடுத்தது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியுள்ளது.
இந்த ஆட்டத்திற்கு முன்னதாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கல்லிஸ் அளித்த கருத்தில்,”உலகக்கோப்பை தொடரின் முதல் இரண்டு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி தோல்வியை சந்தித்தது ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளிக்கிறது. இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்திய அணிக்கெதிரான ஆட்டத்திலும் தோல்வி அடைந்தால் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும். இதுதென்ஆப்பிரிக்க அணிக்கு 3-வது ஆட்டமாகும்.
இந்தியஅணிக்கு இது முதல் ஆட்டம் என்பதால் அந்த அணியினருக்குப் பதற்றத்தை உருவாகலாம். இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி தென் ஆப்பிரிக்க அணி வெற்றியை ருசிக்கும்என எதிர்பார்க்கிறேன்.
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நாம் சிறிய தவறு செய்தாலும் இந்திய அணி புரட்டி எடுத்துவிடும் என்பதால் வீரர்கள் கவனமாக விளையாட வேண்டும்” என எச்சரித்துள்ளார்.
அவர் சொன்ன படியே தொன்னாப்பிரிக்கா செய்த தவறுகளை சாதகமாக்கிக்கொண்டு இந்திய வெற்றி கனியை ருசித்தது குறிப்பிடத்தக்கது.