பழனி கோவிலில் நடராஜன் சாமி தரிசனம்.. இந்திய அணியின் வெற்றியை தொடர்ந்து முடிகாணிக்கை.!
Indian Cricketer Natarajan Palani Temple Visit
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வீரர் நடராஜன் சேலத்தில் உள்ள சின்னம்பட்டி கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். ஐ.பி.எல் போட்டிகள் மூலமாக ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான போட்டியில், இந்திய அணி சார்பாக விளையாட தேர்வு செய்யப்பட்டார்.
தனது திறமையை வெளிப்படுத்த கிடைத்த களத்தை சரியாக உபயோகம் செய்த நடராஜன், பல விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இதனால் இந்திய அளவிலும், தமிழக அளவிலும் நடராஜனின் புகழ் பரவி மக்கள் மனதார தங்களின் வாழ்த்துக்களை பதிவு செய்து வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவில் இருந்து சொந்த ஊர் திரும்பிய நடராஜனிற்கு, ஊர் மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் கலந்துகொண்ட தமிழகத்தைச் சார்ந்த இந்திய வீரர் நடராஜன், தொடரை கைப்பற்றி வெற்றி பெற்றதை அடுத்து நேர்த்திக்கடனாக பழனி முருகன் கோயிலில் சென்று முடி காணிக்கை வழங்கி சுவாமி தரிசனம் செய்து கொண்டார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Indian Cricketer Natarajan Palani Temple Visit