"வாழ்க்கை ஒரு வட்டம்டா".. அன்று பாகிஸ்தானை கண்டு சிரித்தவர்கள்..இந்த வீடியோவை பாருங்க.! வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..! - Seithipunal
Seithipunal


ந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட்டில் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் வங்கதேச அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து வங்கதேச வீரர்கள், இந்திய வீரர்களை கேலி செய்துள்ளனர் இதனால் இரு அணிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் மைதானத்தில் பரபரப்பு நிலவியது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது.

தென்னாப்பிரிக்காவின் பாசஸ்ட்ரூம் நகரில் நடந்த இந்த அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியாவும், நியூஸிலாந்தை வென்று வங்கதேசமும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறின. 

ஏற்கனவே 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்தியா, தற்போது 5-ஆவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் களமிறங்கியது. அதேபோல முதன்முறையாக இறுதிச் சுற்றில் நுழைந்த வங்கதேசம் அணியும் உற்சாகத்துடன் களம் கண்டது. 

நேற்றைய இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 47.2ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 177 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. யாசவி ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 88 ரன்கள் எடுத்தார்.

178 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய விளையாடிய வங்கதேச அணி. 54 பந்துகளுக்கு 15 ரன்கள் எடுக்க வேண்டியிருந்த நிலையில், மழை குறுக்கிட்டது.

இதையடுத்து, 30 பந்துகளுக்கு 7 ரன்கள் என்று வெற்றி இலக்கு குறைக்கப்பட்ட நிலையில், வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாதனை படைத்தது. 

இந்த போட்டியில், இந்திய வீரர்கள் பேட்டிகின் போது ஒரே திசையை நோக்கி ஓடி எளிதாக ரன்-அவுட் ஆன வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 43-வது ஓவரின் முதல் பந்தை ரஹிபுல் பவுலிங் செய்தார். அப்போது அதர்வா(3) ரன்களுடனும், ஜூரெல் (22) ரன்களுடனும் விளையாடிக் கொண்டிருந்தனர். 

ரஹிபுல்லின் பந்தை எதிர்கொண்ட ஜூரெல் 1 ரன் எடுப்பதற்காக  ஓடி வந்துள்ளார். அப்போது அவர் மறுமுனைக்கு வேகமாக ஓடிவந்து விட்டார். ஆனால் பாதி தூரம் ஓடிய அதர்வா மீண்டும் தன்னுடைய முனைக்கே திரும்பி விட்டார். இதைப்பார்த்த வங்கதேச வீரர்கள் எளிதாக ரன் அவுட் செய்தனர்.

இந்திய வீரர்கள் இருவரும் ஒரே நேரத்தில் ஓடிவந்து கிரீஸை தொட்டதால் இருவரில் ஒருவரை வெளியேற்றுவதில் குழப்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ரீபிளேவில் அதர்வா கிரீஸை முதலில் தொட்டதால், நன்றாக ஆடிக்கொண்டிருந்த ஜூரெல்(22) ஆட்டமிழந்து பெவிலியனை நோக்கி திரும்பினார். 

இதைப்பார்த்த ரசிகர்கள் அன்று பாகிஸ்தான் வீரர்கள் இதேபோல ரன் அவுட் ஆகும்போது எப்படி கிண்டல் செய்தீர்கள்? தற்போது இந்திய வீரர்களின் இந்த மோசமான ரன் அவுட்டுக்கு என்ன சொல்வீர்கள்? என்று கிண்டலடித்து வருகின்றனர். முன்னதாக இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் இதேபோல ரன் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian batsman run out video viral


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->