நாளை டி20 போட்டி தொடக்கம்.. அயர்லாந்து புறப்பட்ட இந்திய அணி.!! - Seithipunal
Seithipunal


ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது. இதனிடையே அயர்லாந்து அணிக்கு எதிராக 2 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஹர்திக் பாண்ட்யா தலைமையில் உருவாக்கப்பட்ட இரண்டாம்தர இந்திய அணி 2 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக மும்பையில் இருந்து அயர்லாந்துக்கு புறப்பட்டு சென்றது. இந்தியா - அயர்லாந்து எதிரான 20 ஓவர் டி20 போட்டி நாளையும், 28ஆம் தேதி நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. அயர்லாந்து தொடரில் சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோர் களம் இறங்குகின்றனர். இந்த தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் செயல்படுகிறார்.

இந்திய அணி:

ஹார்திக் பாண்டியா (கேப்டன்), புவனேஷ்வர் குமார் (துணை கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சஹால், அக்ஷர் படேல், ரவி பிஷ்னாய், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india vs lreland t20 match


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->